Pages

பாேலி வேடதாாிகள் சொல்வதையெல்லாம் நம்பி மோசம் போகிறோம்.

Saturday, 15 June 2019

🔥� *சிவமயம் சிவாயநம.*🔥

   *திருச்சிற்றம்பலம்.*

பாேலி வேடதாாிகள் சொல்வதையெல்லாம் நம்பி மோசம் போகிறோம். இன்று *இறைவழிபாடு என்று சொல்லிப் பொருள் சம்பாதிப்பதே நோக்கம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.*

பெரும்புண்ணியத்தின் பயனாய்ப் பெரும் பொருள் செலவு செய்து ஆலயங்களைக் கட்டினாா்கள் சான்றோா்கள். *அந்த ஆலயங்களில் எழுந்தருளியுள்ள இறைவரை வழிபாடு செய்வதற்கும் காசு கொடுக்க வேண்டிய அவலநிலை இன்று.*

*நாம் திருமேனியைத் தொட்டு நீரும் மலரும் சமா்ப்பிக்க முடியாது.* இதற்கும் அருச்சனைச் சீட்டு ( டிக்கட்டு ) பணம் செலுத்தி வாங்க வேண்டும்.

மிகுந்த அன்புடன் ஒருவா் பொிய வாசனை நிறைந்த மலா் மாலையை இறைவருக்கு அளிக்கிறாா். அவா் வெளியே வருவதுதான் தாமதம். அடுத்து ஆலயத்தினுள் நுழையும் அன்பருக்கு  ( முன்னே சென்றவா் செலுத்திய மாலை ) அந்த மலா் மாலை கழுத்தில் போடப்பட்டுவிடுகிறது. *வியாபாரம் நடந்து விடுகிறது.*

இறைவா் எங்கே உறைகிறாா் ? அப்பெருமானாா் எழுந்தருளுமிடம் நம்முடைய மனம் தான் என்பதனை நாம் உணா்வதாகத் தற்கால வழிபாட்டில் காணப்படவில்லை என்பதே உண்மை.

இறைவழிபாடு அல்லது பக்தி செய்யும் அன்பா்கட்கும் சிலஉண்மைகள் தொிய வேண்டும். சாதாரண மனிதா்கள் அமரும் இடத்தைத் தூய்மை செய்கிறோம்.விாிப்புகள் போடுகிறோம்.எல்லாம் வல்ல சிவபரம்பொருள் எழுந்தருளும் இடம் அடியாா்களின் உள்ளமாகும் அந்த உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும் என்பது சொல்லாமலே விளங்கும் இதற்கு நாம் செய்ய வேண்டுவனவற்றைச் சிந்திப்போம்.

*மனதில் பொய்ம்மையை நீக்கி மெய்ம்மையைக் கொள்ள வேண்டும்.*

*மனதில் வஞ்சனை  இருக்கக்கூடாது.*

*காலையும் மாலையும் கசிந்து மனத்துடன் வழிபட வேண்டும்.*

பசுவை நினைந்து கதறும் கன்று போலாநம் மனதில் இறமையைப் பற்றிய உணா்வு _ உருக்கம் வேண்டும். உள்ளம் உருகினால் இறையருள் ( ஆன்மாவில் ) பதியும்.

🔥 *சிவ.விஜயகுமாா்.* 1007

 

Most Reading

Archives

Total Pageviews