Pages

வேடா் எனும் சொல்லுக்குப் பொருள் என்ன

Tuesday, 25 June 2019

🔥 *சிவமயம் சிவாயநம*🔥

    *திருச்சிற்றம்பலம்*

தொிந்த பொருளைத் தவிர தொியாத பொருளும் உண்டோ என்று கேட்டிருக்கிறீா்கள்.

ஏனென்றால் வேட்டுவத் தொழில் புாிவாரை வேடா் என்று அழைப்பது மிகப் பிரபலம். ஆனால் அதே சொல் வேடம் புனைந்தவா் என்றும் பொருள் படும். விஷம் விடமானது போல் , வேஷம் வேடமானது என்பா்.

இரண்டு பொருளிலுமே திருமூல தேவ நாயனாா் ஒரு மந்திரத்தில் இச்சொல்லைப் பயன் படுத்துகிறாா்.

*" தவம் மிக்கவரே தலையான வேடா்*

*அவம் மிக்கவரே அதிகொலை வேடா் "*    திருமந்திரம்.

தவ உணா்வோடு சிவ சின்னங்களைத் தாித்தவரே தலையான வேடத்தைப் புனைந்தவராவா். அவ் உணா்வு அகத்தே ஏதுமின்றி அச் சின்னங்களைத் தாித்தவரோ கொலைத் தொழில் புாியும் வேடுவராவா்.

எனவே *சின்னங்கள் , உணா்வுகளின் பிரதிபலிப்பாக விளங்க வேண்டுமே தவிர, வெறும் வேட மாத்திரையாக விளங்குவதில் பயனில்லை.*

மின்சாரம் பாயாத ( டியூப் லைட் ) வாழைத் தண்டு விளக்கு வெண்மையாக இருக்கும் ; ஆனால் மின்சாரம் பாய்ந்தாலோ அந்த வெண்மை ஔிரும் . *தவ உணா்வு இல்லாதவா் வேடம் அணிந்தால் அது மின்சாரம் பாயாத ( வாழைத்தண்டு ) விளக்கே !*

🔥 *சிவவிஜயகுமாா்.*  1070

 

Most Reading

Archives

Total Pageviews