சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
அதை பற்றித் தெரிந்து கொள்வோம்
சிவனை தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்
சுத்தமான பசுவின் கறந்த பாலில் அபிஷேகம் செய்தால் தீர்க்க ஆயுள் கிடைக்கும்
சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் குயிலினும் இனிய குரல் கிடைக்கும்
சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்
இளநீர் அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிட்டும்
பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்
தயிர் அபிஷேகம் செய்தால் சம்பத்து கிடைக்கும்
கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்
மஞ்சள் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்
ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். அதுவே முறை. முடிந்தால் அப்போது பழங்களைக் கூட நிவேதனம் செய்யலாம்.