Pages

Sunday, 2 April 2017

சாந்தம்

வேதாந்த தத்துவங்களைப் பயின்று தம்முடைய நடைமுறை வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றி வாழ்வோர் ஆசையென்னும் புயல்காற்றால் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.  தங்களுடைய தேவைகளைக் குறைத்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து உலக நாட்டம் அடியோடு அகற்றப்பட்டுச் சாந்தத்துடன் இலங்குவர்.  வேண்டத்தகாத விருப்போ, அந்த எண்ணம் ஈடேறாவிடில் விளையும் வெறுப்போ அவர்களிடம் காணப்படமாட்டா.