Pages

Wednesday, 24 February 2016

இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா

★மனிதன் நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு நோய் காரணமாக அமைகிறது. இந்த கருவியை பயன்படுத்தினால் மனிதனுக்கு நோய் வரவே வராது. ★இதை யோகம் செய்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது சித்தர்கள் கண்டுபிடித்த easy technology. ★ இதை share செய்தால் கூச்சமாக நினைப்பார்கள் என்ற காரணத்தினால் தான் இதை யாருக்கும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர். சித்தர்கள் கண்டுபிடித்து பயன் இல்லாமல் போகுமா என்ன!!!!!! இந்த குறிப்பு பதினாறு கவனகர் ஐயா மூலமாக தான் எனக்கு தெரிய வந்தது. நான் 5 வருடமாக இந்த கருவியை பயன்படுத்துகிறே ன். கடந்த 5 வருடமாக எனக்கு நோய் வந்ததே இல்லை. நான் தினமும் காலையில் mega tv வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி 7; 30 am மணிக்கு பார்ப்பேன். அற்புதமான நிகழ்ச்சி. இந்த நிகழ்சி நான் பார்க்கவில்லை என்றால் நானும் சாதாரண மனிதனாகவே வாழ்ந்திருப்பேன். "உடம்பார் அழியில்..." உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. திருமந்திரம்-4: ◆◆◆இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா◆◆◆ ★★★★★★★★★★★★★★★★ இனிமா எடுக்கும் முறை: ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ★தலை உயரத்தில் (அதிகபட்ச உயரத்தில் ) எனிமா கேனை மாட்டி கொள்ளவும். ★நாசிலின் மீது எண்ணெய் தடவவும். சுத்தமான குடிநீரைத் தேவையான அளவு கேனில் ஊற்றவும் . ★குனிந்து நின்று கொண்டு ஆசன வாயில் நாசிலை செருகவும். உள்ளே சுமார் 2 அங்குலம் ஆழம் இருக்கும்படியாக இழுத்து வைக்கவும். ★அப்போது நீர் உள்ளே செல்லும். செல்லாவிட்டால் நாசிலை வெவ்வேறு கோணங்களில் சாய்த்து பிடித்தால் நீர் உட் செல்லும். மூன்று நிமிடங்களில் நீர் சென்றுவிடும் . ★தேவையான நீர் உட் சென்றவுடன் நாசிலை எடுத்து விடலாம். நீரை உடனே கழித்து விட கூடாது. இதனால் பயன் குறைவு. ★சில நிமிடங்கள் நீரை உள்ளே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். முடியாவிட்டால் கழித்து விடலாம். ★எனிமா எடுத்து கொண்டவுடன் குத்துக்கால் வைத்து படுத்துக் கொண்டால் தான் நீரை வைத்திருக்க எளிதாய் இருக்கும். ★நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தால் சிரமம். தேவையான நேரம் வைத்திருந்து விட்டு நீரை கழித்து விடலாம். ★மோட்டார் சைக்கிள் , கார் போன்ற வாகனங்களில் புகையை வெளியேற்றும் குழாய் ( exhaust pipe ) அடைத்து கொண்டால் எஞ்சின் இயக்கம் நின்றுவிடும். ★அதேபோல் கழிவை வெளியேற்றும் மலக்குடலில் இருக்கும் ஜென்மாந்திர அடைப்பே நம்முடைய பல நோய்களுக்கு காரணம். ★நெற்றியில் வெள்ளை மலமும் அடிவயிற்றில் மஞ்சள் மலமும் சேரகூடாது என்று வள்ளலார் கூறியுள்ளார். மனிதனுக்கு பல நோய்கள் வருவதற்கு காரணம் கழிவுகளை வெளியேற்றாமல் தேக்கி வைப்பதே காரணம். எந்த பாம்பிற்காவது எனக்கு பல் வழி என்று சொல்லி கொண்டு டாக்டர் கிட்ட போயிருக்கா!!. அல்லது எந்த கிளி யாவது எனக்கு ஜலதோஷம் புடிச்சிருக்கு கீச்சி கிச்சி னு கத்த முடியல னு சொல்லி இருக்குமா !!!. மனிதனுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு நோய்கள் வருகிறது ??. அதுவும் ஆறு அறிவு என்று நம்மை நாமே சொல்லி கொள்கிறோம். நன்றி சித்தர்களின் குரல் முக நூல்.